குள்ளஞ்சாவடி ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

கடலுார்: குள்ளஞ்சாவடி ரவுடியை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த அகரம் ரோட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் மகன் அஸ்வின்,23; இவர் கடந்த 22ம் தேதி, குள்ளஞ்சாவடி அண்ணா பாலம் அருகே கையில் கத்தியுடன் சாலையில் சென்ற பொதுமக்களை அச்சுறுத்தினார்.
தகவலறிந்த குள்ளஞ்சாவடி போலீசார், அஸ்வினை கைது செய்தனர். அஸ்வின் மீது குள்ளஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் 'போக்சோ' , வழிப்பறி, ஆயுதவழக்கு உட்பட ஆறு வழக்குகளும், கடலுார் முதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு வழக்கு என மொத்தம் 7 வழக்குகள் உள்ளன.
இவரது குற்றச்செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி.,ஜெயக்குமார் உத்தரவின் பேரில், கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார், அஸ்வினை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். கடலுார் மத்திய சிறையில் உள்ள அஸ்வினிடம், போலீசார் உத்தரவு நகலை வழங்கி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
மேலும்
-
துபாய் 67 அடுக்குமாடி கட்டிடத்தில் பெரும் தீ விபத்து: 3,820 குடியிருப்பாளர்களும் பத்திரமாக மீட்பு
-
லண்டனில் வரலாறு படைத்தது தென் ஆப்ரிக்கா: உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று சாதனை
-
தென் ஆப்ரிக்க அணி வரலாறு: டெஸ்ட் உலக கோப்பை வென்றது
-
ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் தலைநகர் பற்றி எரியும்; இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை!
-
அதிகமாக படியளப்பது மாநில அரசு: முதல்வர் ஸ்டாலின்
-
விமான விபத்தின் போது நடந்தது என்ன: கறுப்பு பெட்டி ஆய்வுக்கு பிறகு தெரியும் என மத்திய அமைச்சர் பேட்டி