தினமலர் செய்தி எதிரொலி - உடைக்கப்பட்ட வடிகால்வாய் சீரமைப்பு

சென்னை,:எழும்பூர், பின்னி சாலையில் உள்ள காயித மில்லத் கல்லுாரி அருகே, கடந்தாண்டு பெய்த கனமழையின்போது தண்ணீர் தேங்கியது. அங்குள்ள வடிகால்வாயை உடைத்து, மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அகற்றினர்.
பல மாதங்களாகியும், உடைக்கப்பட்ட வடிகால்வாயை, அதிகாரிகள் சீரமைக்கவில்லை. இதனால், அவ்வழியாக நடந்து செல்லும் மாணவியர், வடிகால்வாயில் தவறி விழுந்து காயமடையும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து, நம் நாளிதழில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக மாநகராட்சியினர் நேற்று, கிரேன் இயந்திரம் வாயிலாக கான்கிரீட் கட்டமைப்பை துாக்கி வந்து, உடைக்கப்பட்ட வடிகால்வாயில் பொருத்தி, பள்ளத்தை மூடினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துபாய் 67 அடுக்குமாடி கட்டிடத்தில் பெரும் தீ விபத்து: 3,820 குடியிருப்பாளர்களும் பத்திரமாக மீட்பு
-
லண்டனில் வரலாறு படைத்தது தென் ஆப்ரிக்கா: உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று சாதனை
-
தென் ஆப்ரிக்க அணி வரலாறு: டெஸ்ட் உலக கோப்பை வென்றது
-
ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் தலைநகர் பற்றி எரியும்; இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை!
-
அதிகமாக படியளப்பது மாநில அரசு: முதல்வர் ஸ்டாலின்
-
விமான விபத்தின் போது நடந்தது என்ன: கறுப்பு பெட்டி ஆய்வுக்கு பிறகு தெரியும் என மத்திய அமைச்சர் பேட்டி
Advertisement
Advertisement