இஸ்ரேல் - ஈரான் மோதல் எதிரொலி: விமான போக்குவரத்து பாதிப்பு

மும்பை: இஸ்ரேல் - ஈரான் இடையே தாக்குதல் எதிரொலியால் நீண்ட துாரம் செல்லும், 'ஏர் - இந்தியா'வின், 16 விமானங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால், பயணியர் கடும் அவதிக்குள்ளாகினர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலின் அணுசக்தி தொடர்பான ரகசியங்களை திருடியுள்ளதாக ஈரான் சமீபத்தில் கூறியது. இதற்கிடையே, அமெரிக்கா - ஈரான் இடையே, அணுசக்தி தொடர்பான பேச்சு நடந்தது.
தாக்குதல்
ஐந்து சுற்று பேச்சு நடந்த நிலையில், முடிவு ஏதும் எட்டவில்லை. இதன் காரணமாக, ஈரான் தலைநகர் தெஹ்ரான் அணுஆயுத தளங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதலை நேற்று துவக்கியது.
இதையடுத்து, ஈரான் வான்பரப்பு மூடப்பட்டதால், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, ஈரான் வழியாக செல்லும், 'ஏர் - இந்தியா' விமானங்கள் மாற்று பாதைகளில் இயக்கப்பட்டன.
பயணியரின் பாதுகாப்பை கருத்தில் வைத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, 'ஏர் - இந்தியா' நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, லண்டன் - மும்பை விமானம், ஆஸ்திரியாவின் வியன்னாவுக்கும், நியூயார்க் - டில்லி விமானம், ஐக்கிய அரபு எமிரேட்சின் சார்ஜாவுக்கும், நியூயார்க் - மும்பை விமானம், சவுதி அரேபியாவின் ஜெட்டாவிற்கும் திருப்பி விடப்பட்டன.
அறிவிப்பு
இதேபோல் லண்டன் - டில்லி விமானம், மும்பைக்கு அனுப்பப்பட்டது. இதுதவிர மும்பை - லண்டன் மற்றும் மும்பை - நியூயார்க் சென்ற விமானங்கள் மீண்டும் மும்பைக்கே திரும்பிவந்தன.
டில்லி - வாஷிங்டன் விமானம் டில்லிக்கே திரும்பியது. நியூ ஹார்க் - டில்லி விமானம், வியன்னாவுக்கு திருப்பிவிடப்பட்டது. நீண்ட துாரம் செல்லும், 'ஏர் இந்தியா'வின், 16 விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, 'இண்டிகோ' நிறுவனமும் நீண்ட துாரம் செல்லும் சில விமானங்களை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும்
-
துபாய் 67 அடுக்குமாடி கட்டிடத்தில் பெரும் தீ விபத்து: 3,820 குடியிருப்பாளர்களும் பத்திரமாக மீட்பு
-
லண்டனில் வரலாறு படைத்தது தென் ஆப்ரிக்கா: உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று சாதனை
-
தென் ஆப்ரிக்க அணி வரலாறு: டெஸ்ட் உலக கோப்பை வென்றது
-
ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் தலைநகர் பற்றி எரியும்; இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை!
-
அதிகமாக படியளப்பது மாநில அரசு: முதல்வர் ஸ்டாலின்
-
விமான விபத்தின் போது நடந்தது என்ன: கறுப்பு பெட்டி ஆய்வுக்கு பிறகு தெரியும் என மத்திய அமைச்சர் பேட்டி