நாளை டி.என்.பி.எஸ்.சி., தேர்வு சேலத்தில் 14,291 பேருக்கு அனுமதி

சேலம்: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் - 1, 1ஏ தேர்வு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தா-தேவி தலைமை வகித்து பேசியதாவது:
குரூப் 1, 1ஏ தேர்வு, ஜூன், 15ல்(நாளை) நடக்கிறது. சேலம் மாவட்டத்தில், 14,291 பேர், இத்தேர்வை எழுதுகின்றனர். சேலம், சேலம் மேற்கு, தெற்கு, ஆத்துார் ஆகிய மையங்களில், 41 பள்ளி, கல்லுாரிகளில் அமைக்கப்பட்டுள்ள, 51 கூடங்களில், காலை, 9:30 முதல் மதியம், 12:30 மணி வரை தேர்வு நடக்கும். காலை, 8:30 மணி முதல், தேர்வு கூடத்தில் அனுமதிக்கப்படு-வதால், உரிய நேரத்துக்குள் தேர்வர்கள் வர வேண்டும். 9:00 மணி வரை மட்டும் அனுமதி உண்டு. தாமதமாக வருவதை தேர்-வர்கள் தவிர்க்க வேண்டும்.
தேர்வுக்கு, 14 நடமாடும் கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்-ளது. தேர்வாணைய விதிமுறைக்கு ஏற்ப, வினாத்தாள், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள் சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம், தேர்வு எழுதுவோரின் நுழைவுச்சீட்டு ஆகிய-வற்றை சரிபார்த்தல் போன்ற பல்வேறு பணிகள், முறையாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்-டுள்ளது. தேர்வு மையங்களுக்கு வந்து செல்ல வசதியாக தேர்வர்-களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். தேர்வு நடக்கும் மையங்கள், வீடியோ பதிவு செய்யப்படும். அடிப்படை, பாது-காப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement