சேமங்கி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

கரூர்: சேமங்கி மாரியம்மன் கோவிலில், வைகாசி மாத வெள்ளிக்கிழமையையொட்டி, சிறப்பு அலங்காரம் நேற்று நடந்தது.

பிரசித்தி பெற்ற, வேலாயுதம்பாளையம் அருகே சேமங்கி மாரியம்மன் கோவிலில், வைகாசி மாத வெள்ளிக்கிழமையையொட்டி, மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. அதை தொடர்ந்து, சந்தன காப்பு மற்றும் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில், மூலவர் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement