சார்பதிவாளர் அலுவலக கட்டுமான பணி ஆய்வு
ராசிபுரம்: ராசிபுரத்தில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டடம் கட்டும் பணி, 1.35 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கியது. ஆறு மாதங்களில் முடிக்க வேண்டிய பணி, ஓராண்டாகியும் நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று பொதுப்பணித்துறை அதிகாரி கார்த்திகேயன், சார்பதிவாளர் சுப்ரமணியன் ஆகியோர் கட்டடம் கட்டும் பணியை ஆய்வு செய்தனர். முன்பகுதியில் கண்ணாடி பொருத்தும் இடம், கழிவறையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட சில மாற்றங்களை கூறினர். மேலும், இப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement