திறப்பு விழா காணுமா?

வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், ஓராண்டிற்கு முன் மங்கலம் தொகுதியில், ஆச்சாரியாபுரம், உறுவையாறு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் தலா ரூ.10 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன.

அதில், கீழ் அக்ராஹரம் மற்றும் அரியூர் கிராமங்களில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக பணிகள் முடிந்த நிலையில், இதுவரையில் திறப்பு விழா காணாமல் கடந்த ஓராண்டாக பூட்டிக் கிடக்கின்றன.

இதனால் மக்கள் பணம் பாழாவதோடு, சுத்திகரிப்பு நிலையமும் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதற்கு முன்பாக கொம்யூன் அதிகாரிகள், பூட்டிக் கிடக்கும் சுத்திகரிப்பு நிலையங்களை ஆய்வு செய்து, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement