பெண்ணை எட்டி பார்த்தவர் சிக்கினார்

செம்பியம், வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண், ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த ஏப்., 27ம் தேதி இரவு, வீட்டில் உள்ள கழிப்பறைக்கு சென்றபோது, மர்ம நபர் ஒருவர் எட்டி பார்த்துள்ளார்.

அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, போலீசில் சிக்காமல் இருக்க பக்கத்துக்கு வீட்டில் இருந்த 'சிசிடிவி'யை உடைத்து தப்பினார்.

இது குறித்து விசாரித்த செம்பியம் போலீசார், பெரம்பூர், எஸ்.எஸ்.வி., கோவில் தெருவைச் சேர்ந்த பிரேம்குமார், 21, என்பவரை, நேற்று கைது செய்து, பின் ஜாமினில் விடுவித்தனர்.

Advertisement