தடுப்பு இல்லாத சிறுபாலத்தால் கடல்மங்கலத்தில் விபத்து அபாயம்

உத்திரமேரூர்:கடல்மங்கலம் சாலையில் உள்ள சிறுபாலத்தில் தடுப்புகள் இல்லாததால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் கிராமத்தில் இருந்து, திருப்புலிவனம் செல்லும் சாலையில் இருந்து பிரிந்து, கடல்மங்கலம் சாலை செல்கிறது. இச்சாலையின் குறுக்கே செல்லும் நீர்வரத்து கால்வாய் மீது, சிறுபாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த சிறுபாலத்தின் வழியே, தினமும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. 25 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட, இந்த சிறுபாலத்தின் இருபுறமும் தடுப்புகள் இல்லாமல் உள்ளது.
இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் நிலைத்தடுமாறி, 10 அடி ஆழமுள்ள கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.
மேலும், சிறுபாலம் அமைந்துள்ள பகுதியில் மின் விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சிறுபாலத்தில் தடுப்புகள் அமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
பிரிட்டன் போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம்; காரணம் இதுதான்!
-
கல்வியில் சிறந்த தமிழகம் என்பதை உறுதிசெய்வோம்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
-
நிச்சயம் விஞ்ஞானியாக வருவீங்க; பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் வழங்கி விஜய் பாராட்டு
-
இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்கா பங்கு இல்லை; ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
-
4 நாட்கள் பயணம்; சைப்ரஸ், கனடா, குரோஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி!
-
துமகூரு பெயரை மாற்றுவதா?