அறுபடை வீடு கண்காட்சி நாளை முதல் பார்க்கலாம்
மதுரை:மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அமைக்கப்படும் அறுபடை வீடு மாதிரி கண்காட்சியை, நாளை முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்.
மதுரை, வண்டியூர் டோல்கேட் அருகே அம்மா திடலில், ஜூன் 22ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளை குறிக்கும் மாதிரி வடிவங்கள், மாநாட்டு வளாகத்தில் தற்காலிகமாக நிறுவப்பட்டு வருகிறது.
ஹிந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் கூறியதாவது:
அறுபடை வீடுகளின் மாதிரி கண்காட்சி அமைக்கும் பணி ஜூன், 15 இரவுக்குள் முடிக்கப்படும். பூஜை, ஜூன் 16 காலை, 9:00 மணிக்கு தொடங்கும்.
ஜூன், 22 வரை காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை பொதுமக்கள் பார்வையிட இலவசமாக அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரிட்டன் போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம்; காரணம் இதுதான்!
-
கல்வியில் சிறந்த தமிழகம் என்பதை உறுதிசெய்வோம்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
-
நிச்சயம் விஞ்ஞானியாக வருவீங்க; பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் வழங்கி விஜய் பாராட்டு
-
இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்கா பங்கு இல்லை; ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
-
4 நாட்கள் பயணம்; சைப்ரஸ், கனடா, குரோஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி!
-
துமகூரு பெயரை மாற்றுவதா?
Advertisement
Advertisement