அம்மையப்பநல்லுாரில் குடிநீர் தொட்டி சேதம்

உத்திரமேரூர்:அம்மையப்பநல்லுாரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சேதமடைந்து உள்ளது.
உத்திரமேரூர் ஒன்றியம், அம்மையப்பநல்லுார் ஊராட்சியில் இருளர் குடியிருப்பு, திடீர் நகர், அய்யப்பா நகர், அம்மையப்பநல்லுார் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன.
இங்கு, 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகளுக்கு தேவையான குடிநீரை, ஊராட்சி நிர்வாகத்தினர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கைக்குழாய் ஆகியவற்றின் வாயிலாக விநியோகம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அம்மையப்பநல்லுார் கிராமத்தில் மானாம்பதி செல்லும் சாலையோரம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
கடந்த 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட, இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் தூாண்கள் சேதமடைந்து, கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது.
எனவே, சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
பா.ம.க., பொதுச்செயலாளர் நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு
-
பனை மரம் ஏறி கள் இறக்கினார் சீமான்; தடையை மீறி போராட்டம்!
-
பிரிட்டன் போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம்; காரணம் இதுதான்!
-
கல்வியில் சிறந்த தமிழகம் என்பதை உறுதிசெய்வோம்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
-
நிச்சயம் விஞ்ஞானியாக வருவீங்க; பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் வழங்கி விஜய் பாராட்டு
-
இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்கா பங்கு இல்லை; ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை