நடிகை கொல்லங்குடி  கருப்பாயி காலமானார்

சிவகங்கை:நடிகை கொல்லங்குடி கருப்பாயி வயது முதிர்வு காரணமாக காலமானார்.

சிவகங்கை அருகே கொல்லங்குடியை சேர்ந்தவர் கருப்பாயி, 99. இவரை, ஆண் பாவம் திரைப்படத்தில், இயக்குநர் பாண்டியராஜன் அறிமுகப்படுத்தினார். நாட்டுப்புற பாடகியான இவர், 1,000க்கும் மேற்பட்ட மண்ணிசை பாடல்களை பாடியிருக்கிறார்.

கோபாலா கோபாலா, ஆயுசு நுாறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 1993ல் இவரது கலைச்சேவையை பாராட்டி முதல்வர் ஜெயலலிதா, 'கலைமாமணி' விருது வழங்கினார். கணவர் செல்லையா இறந்தபின், திரைத்துறையிலிருந்து இவர் விலகினார்.

தமிழ் சினிமாவில் நடிகையாகவும், பாடகியாகவும் இருந்த கொல்லங்குடி கருப்பாயி, வயது முதிர்வின் காரணமாக நேற்று காலமானார்.

Advertisement