'ஆப்பரேஷன் சிந்துார்' உலக நாடுகள் பாராட்டு

நாமக்கல், நாமக்கல்லில் பல்வேறு அமைப்புகள் சார்பில், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை தொடர்பான விளக்க கருத்தரங்கம், நாமக்கல்லில் நடந்தது. 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில் பங்கேற்ற, நாமக்கல் மாவட்டம், மோகனுார் அடுத்த சின்னக்கரசபாளையம் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் சக்கரவர்த்திக்கு, சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். இந்திய ராணுவத்தின் முன்னாள் மேஜர் நாராயணன் பங்கேற்றார்.

அவர் பேசுகையில, ''நாட்டு மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை தாரக மந்திரமா


க கொண்டு நம் படையினர் பணியாற்றி வருகின்றனர். பஹல்காம் தாக்குதலில் நாம் பாதிக்கப்பட்டதால், நின்று நிதானமாகவும், மிக உன்னிப்பாகவும், தீவிரவாத முகாம்கள் மீது, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையை நடத்தி தீவிரவாதத்திற்கு எதிரான தக்க பதிலடி அளித்துள்ளோம். இந்த நடவடிக்கையின் போது நாம் செயல்பட்ட விதத்தை, நம் நாட்டின் நன்னெறி, தன்னம்பிக்கை, கட்டுப்பாடு, வெற்றி ஆகியவற்றை உலக நாடுகள் பாராட்டுகின்றன,'' என்றார்.

Advertisement