வங்கதேசத்தவர்களிடம் போலீசார் விசாரணை -
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒரு பெண் உட்பட நான்கு வங்கதேசத்தவர்களிடம், பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக நமது நாட்டுக்குள் நுழைந்து, போலி ஆவணங்களை காட்டி, கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நிறுவனங்களில் தங்கி, பணியாற்றி வருவது குறித்து, போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில், கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில், ஒரு பெண் உட்பட நான்கு வங்கதேசத்தவர்கள் வேலை பார்த்து வருவதாக தகவல் கிடைத்தது. அவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், போலி ஆதார் கார்டுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை வழங்கியவர் யார், எப்படி தயாரித்தனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
பனை மரம் ஏறி கள் இறக்கினார் சீமான்; தடையை மீறி போராட்டம்!
-
பிரிட்டன் போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம்; காரணம் இதுதான்!
-
கல்வியில் சிறந்த தமிழகம் என்பதை உறுதிசெய்வோம்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
-
நிச்சயம் விஞ்ஞானியாக வருவீங்க; பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் வழங்கி விஜய் பாராட்டு
-
இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்கா பங்கு இல்லை; ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
-
4 நாட்கள் பயணம்; சைப்ரஸ், கனடா, குரோஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி!