துபாயில் 67 மாடி குடியிருப்பில் தீ விபத்து

துபாய்,: மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயின் பிரபலமான குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதி மரீனா. இங்கு, 'டைகர் டவர்' என்ற பெயரில் 67 மாடி குடியிருப்பு உள்ளது.
இந்த கட்டடத்தில், 700க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதில், 3,820 பேர் வசிக்கின்றனர்.
இந்நிலையில், கட்டடத்தின் 30வது மாடியில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ சில நிமிடங்களில் மளமளவென எரிந்து உயரே உள்ள தளங்களுக்கும், கீழ் தளங்களுக்கும் பரவியது.
இது குறித்து, தீயணைப்பு துறை மற்றும் அவசரகால மீட்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், கட்டடத்தில் இருந்த 3,000க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டனர்.
தீயுடன் புகையும் பரவியதால் பலர் மூச்சுத்திணறலுக்கு ஆளாகினர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிர் சேதமோ, காயமோ யாருக்கும் ஏற்படவில்லை.
உயரமான பகுதியில் தீ பற்றியதால், தீயணைப்பு வீரர்கள் காலை வரை போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து காரணமாக, துபாய் மரீனாவில் டிராம் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
குடியிருப்புவாசிகளுக்கு தற்காலிக தங்கும் வசதிகள் செய்து தரப்பட்டன.
மேலும்
-
பிரிட்டன் போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம்; காரணம் இதுதான்!
-
கல்வியில் சிறந்த தமிழகம் என்பதை உறுதிசெய்வோம்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
-
நிச்சயம் விஞ்ஞானியாக வருவீங்க; பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் வழங்கி விஜய் பாராட்டு
-
இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்கா பங்கு இல்லை; ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
-
4 நாட்கள் பயணம்; சைப்ரஸ், கனடா, குரோஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி!
-
துமகூரு பெயரை மாற்றுவதா?