உள்ளூர் வர்த்தக செய்திகள்
* ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 4,489 மூட்டைகளில், ௧.௮௯ லட்சம் கிலோ கொப்பரை வரத்தானது. முதல் தரம் கிலோ, 22௧ ரூபாய் முதல், 238.65 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 41.89 ரூபாய் முதல் 232.60 ரூபாய் வரை, ௩.99 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
* சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று, 30 கிலோ எடை கொண்ட, 2,400 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை, 1,250 முதல், 1,400 ரூபாய் வரை விற்பனையானது. உருண்டை வெல்லம், 3,200 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,300 முதல், 1,420 ரூபாய்; அச்சு வெல்லம், 400 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,400 முதல், 1,460 ரூபாய்க்கு விலை போனது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம் மூட்டைக்கு, 30 ரூபாய் விலை உயர்ந்தது. உருண்டை வெல்லம் மூட்டைக்கு, 30 ரூபாய் விலை சரிந்தது.
* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் எள் ஏலம் நடந்தது. மொத்தம், 592 மூட்டை வரத்தானது. கருப்பு ரகம் கிலோ, 90.09 முதல், 147.60 ரூபாய்; சிவப்பு ரகம், 75.10 முதல், 143.90 ரூபாய்; வெள்ளை ரகம், 93.62 முதல், 127.10 ரூபாய் வரை, 44,373 கிலோ எள், 45.80 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* கோபி அருகே மொடச்சூரில், பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனைக்கான வாரச்சந்தை நேற்று கூடியது. துவரம் பருப்பு (கிலோ), 110 ரூபாய், குண்டு உளுந்து, பச்சைபயிர், வெந்தயம், வெள்ளை சுண்டல், கடுகு தலா, 120 ரூபாய்க்கும் விற்பனையானது. பாசிப்பருப்பு, 140, கொள்ளு, 80, சீரகம், 400, பொட்டுக்கடலை, 110, கருப்பு சுண்டல், 100, வரமிளகாய், 180 முதல், 200 ரூபாய் வரையும், புளி, 160 முதல், 180 ரூபாய் வரையும், பூண்டு, 120 முதல், 180 ரூபாய் வரை விற்பனையானது.
* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 23,559 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 54.11 முதல், 74.99 ரூபாய் வரை, 9,411 கிலோ தேங்காய், ஐந்து லட்சத்து, 96,952 ரூபாய்க்கு விலை போனது.
* அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் கால்நடை சந்தை நேற்று கூடியது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து, ௨,500க்கும் அதிகமான மாடுகள், எருமை மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. சிறிய ரக மாடுகள், ௨,௦௦௦ ரூபாய் முதல் ௩,௦௦௦ ரூபாய் வரை விற்றது. பெரிய ரக மாடுகள், 45 ஆயிரம் ரூபாய் முதல் 49 ஆயிரம் ரூபாய்; எருமை கன்றுகள், 2,500 ரூபாய் முதல் 3,500 ரூபாய்; பெரிய அளவிலான எருமை, 50 ஆயிரம் ரூபாய் முதல் 55 ஆயிரம் ரூபாய் வரை விற்றது.
* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி ஒரு கிலோ, 60 ரூபாய்க்கும், நேந்திரன், 42 ரூபாய்க்கும் விற்றது. செவ்வாழை, 1,080, தேன்வாழை, 690, பூவன், 800, ரஸ்த்தாளி, 700, மொந்தன், 410, ரொபஸ்டா, 480, பச்சைநாடான், 680 ரூபாய்க்கும் ஏலம் போனது. வரத்தான, 4,460 வாழைத்தார்களும், 11.10 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய், 14 ரூபாய் முதல் 32 ரூபாய் வரை விற்பனையானது.
* திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 23,644 தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 70.60 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ, 54.20 ரூபாய் என, 10 டன் தேங்காய், 6.௨௨ லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல் தேங்காய் பருப்பு ஏலத்துக்கு, 916 கிலோ வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், 232.30 ரூபாய், குறைந்தபட்சம், 120.10 ரூபாய்க்கும் ஏலம் போனது. இதேபோல் முத்துார் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூட மையத்தில் எள் ஏலம் நடந்தது. 18 விவசாயிகள், 51 மூட்டைகளில், 3,779 கிலோ எள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 80.19 ரூபாய் முதல், 127.19 ரூபாய் வரை விலை போனது.
மேலும்
-
பனை மரம் ஏறி கள் இறக்கினார் சீமான்; தடையை மீறி போராட்டம்!
-
பிரிட்டன் போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம்; காரணம் இதுதான்!
-
கல்வியில் சிறந்த தமிழகம் என்பதை உறுதிசெய்வோம்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
-
நிச்சயம் விஞ்ஞானியாக வருவீங்க; பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் வழங்கி விஜய் பாராட்டு
-
இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்கா பங்கு இல்லை; ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
-
4 நாட்கள் பயணம்; சைப்ரஸ், கனடா, குரோஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி!