வண்டலுார், ஓட்டேரி பகுதியில் வேகத்தடை பணிகள் விறுவிறு

வண்டலுார்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, வண்டலுார், ஓட்டேரி பகுதியில், நான்கு தெருக்களில் வேகத்தடை அமைக்கும் பணி துவங்கப்பட்டது.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலூர் ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 50,000க்கும் மேற்பட்ட நபர்கள் வசிக்கின்றனர்.
இதில், ஓட்டேரி பகுதி, 11வது வார்டுக்கு உட்பட்ட செல்வ விநாயகர் கோவில் தெரு, பிரதான சாலை 400 மீ., தூரம் உள்ளது. இந்த, சாலையின் இரு புறமும் சிறிய மருத்துவமனைகள், மருந்தகங்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இந்த சாலையில் கண்மூடித்தனமான வேகத்தில் இருசக்கர வாகனங்கள் சென்றதால், தினமும் இரு நபர்களாவது விபத்தில் சிக்கி காயமடைந்தனர்.
தவிர, 12 மற்றும் 13வது வார்டுக்கு உட்பட்ட வால்மீகி தெரு, 13வது வார்டுக்கு உட்பட்ட 4வது பிரதான சாலை, 14வது வார்டுக்கு உட்பட்ட முதல் பிரதான சாலையிலும், இதே போன்று அடிக்கடி விபத்துகள் நடந்தன.
எனவே, நான்கு சாலைகளிலும் 50 மீ., துாரத்திற்கு ஒரு வேகத்தடை அமைத்தால், விபத்துகளை தவிர்க்க முடியும் என, பகுதிவாசிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை எழுப்பி வந்தனர்.
இது குறித்து, நம் நாளிதழ் செய்தி வெளியானது. இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில், சாலைகளை ஆய்வு செய்து, வேகத்தடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் நான்கு சாலைகளிலும் வேகத்தடை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு பணி நடந்து வருகிறது.
மேலும்
-
பா.ம.க., பொதுச்செயலாளர் நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு
-
பனை மரம் ஏறி கள் இறக்கினார் சீமான்; தடையை மீறி போராட்டம்!
-
பிரிட்டன் போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம்; காரணம் இதுதான்!
-
கல்வியில் சிறந்த தமிழகம் என்பதை உறுதிசெய்வோம்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
-
நிச்சயம் விஞ்ஞானியாக வருவீங்க; பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் வழங்கி விஜய் பாராட்டு
-
இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்கா பங்கு இல்லை; ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை