சாலையை சூழ்ந்த முள்செடிகள் ஆவூரில் வாகன ஓட்டிகள் சிரமம்

பொன்னேரி:பொன்னேரி அருகே மெதுார் கிராமத்தில் இருந்து வேம்பேடு, ஆவூர் வழியாக எடகுப்பம் செல்லும் மாநில நெடுஞ்சாலையின் இருபுறமும் முள்செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன.
இவற்றின் கிளைகள் சாலை வரை நீட்டிக் கொண்டிருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோரின் முகத்தில் முள்செடிகள் உரசுவதால், காயம் ஏற்படுகிறது.
மேலும், கார், வேன்களில் முள்செடிகள் உரசும்போது, வாகனங்களில் கீறல்கள் விழுகின்றன. முள்செடிகளால் சாலை குறுகலாக மாறி, வாகனங்கள் எதிரெதிரே பயணிக்கும் போது கூடுதல் சிரமம் ஏற்படுகிறது.
மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகளும், முள்செடிகளின் இடையே திடீரென புகுந்து சாலையை கடக்கின்றன. இதை எதிர்பார்க்காத வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகின்றனர். அவ்வப்போது சிறு சிறு விபத்துகளுக்கு நடந்து வருகின்றன.
எனவே, சாலையின் இருபுறமும் உள்ள முள்செடிகளை அகற்ற, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
பா.ம.க., பொதுச்செயலாளர் நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு
-
பனை மரம் ஏறி கள் இறக்கினார் சீமான்; தடையை மீறி போராட்டம்!
-
பிரிட்டன் போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம்; காரணம் இதுதான்!
-
கல்வியில் சிறந்த தமிழகம் என்பதை உறுதிசெய்வோம்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
-
நிச்சயம் விஞ்ஞானியாக வருவீங்க; பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் வழங்கி விஜய் பாராட்டு
-
இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்கா பங்கு இல்லை; ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை