குழந்தை கழுத்தில் கத்தி வைத்து தாயிடம் 14.5 சவரன் கொள்ளை
தேனி : வீடு புகுந்து குழந்தை கழுத்தில் கத்தி வைத்து, தாயிடம், 14.5 சவரன் நகை, 10,000 ரூபாய் கொள்ளையடிக்கப் பட்டது.
தேனி மாவட்டம், வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் போதுமணி, 45; கூலித்தொழிலாளி.
அங்குள்ள வீட்டில் மகன், மருமகள், மகளுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை மங்கி குல்லா அணிந்த முகமூடி கொள்ளையர் மூவர், சுற்றுச்சுவர் ஏறி குதித்து போதுமணி வீட்டிற்குள் புகுந்தனர்.
பூட்டப்படாத கதவை தள்ளி உள்ளே சென்று, போதுமணி உள்ளிட்டோரை தாக்கினர்.
போதுமணியின், 1.5 வயது பேரனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரது தாய் மற்றும் அத்தை அணிந்திருந்த தாலி செயின், கம்மல், செயின் என, 4.35 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 14.5 சவரன் தங்க நகைகள், 10,000 ரூபாயை கொள்ளையடித்து தப்பினர்.
வீரபாண்டி இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி விசாரிக்கிறார். தேனி, வீரபாண்டி, கோடங்கிபட்டி என, 15 கி.மீ.,க்குள், சில நாட்களில் நான்கு வீடுகளில் கொள்ளை, திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.
மேலும்
-
ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு; கோல்கட்டா ஓடுபாதையில் 1 மணி நேரம் நிறுத்தி வைப்பு
-
போரை விரிவுபடுத்த சதி செய்யும் இஸ்ரேல்; ஈரான் குற்றச்சாட்டு
-
கர்நாடகா, டில்லி, மஹாராஷ்டிரா கேரளாவில் கொட்டி தீர்த்தது கனமழை; 10 பேர் பலி
-
நிலம் தருவதாக ரூ.2,700 கோடி மோசடி: ராஜஸ்தான் சகோதரர்கள் தப்பி ஓட்டம்
-
பாக்., ராணுவ தளபதிக்கு அழைப்பா: தவறான தகவல் என அமெரிக்கா மறுப்பு
-
ஆயுத தொழிற்சாலை அருகில் வசிக்கும் மக்கள் வெளியேறுங்கள்: இஸ்ரேல் கடும் எச்சரிக்கை