ஆயுத தொழிற்சாலை அருகில் வசிக்கும் மக்கள் வெளியேறுங்கள்: இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

டெஹ்ரான்: ஈரானில், ராணுவ ஆயுத தொழிற்சாலை அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்த நிலையில், இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஈரானில் 80 பேரும், இஸ்ரேலில் 10 பேரும் உயிரிழந்தனர். ஈரானில் அணு ஆயுத மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிகின்றன.
இஸ்ரேலில் ஜெருசலேம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஈரானும் கடும் தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், ஈரானில் ராணுவ தொழிற்சாலைகள் அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் அவிச்சே அத்ரே கூறியதாவது; அனைத்து ஈரான் குடிமக்களுக்கும் அவசர எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ராணுவ ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அருகில் வசிக்கும் மக்கள் அனைவரும் அப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும்.
மேலும் மறு அறிவிப்பு வரும் வரை திரும்பி வரக்கூடாது. இந்த பகுதியில் வசித்து வருவது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



மேலும்
-
துணை ஜனாதிபதி வருகை போக்குவரத்து மாற்றம்
-
கடலுாரில் கார் மோதி விபத்து ஒருவர் பலி: 8 பேர் காயம்
-
துணை ஜனாதிபதி புதுச்சேரி வருகை கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் வரவேற்பு
-
புதுச்சேரி பல்கலையில் அனைத்து படிப்புகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீடு துணை ஜனாதிபதியிடம் முதல்வர் ரங்கசாமி கோரிக்கை
-
கிரிக்கெட் விளையாட்டில் வீரர் மயங்கி விழுந்து சாவு
-
ஆயிரம் சந்தேகங்கள்: சர்க்கரை நோயாளிகள் 'டேர்ம் இன்ஷூரன்ஸ்' எடுக்கலாமா?