போரை விரிவுபடுத்த சதி செய்யும் இஸ்ரேல்; ஈரான் குற்றச்சாட்டு

தெஹ்ரான்: ஈரானுக்கு வெளியே போரை விரிவுபடுத்த இஸ்ரேல் முயற்சிக்கிறது என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரானின் ராணுவ தலைமையகம் மற்றும் அணுசக்தி நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், 3வது நாளாக இருநாடுகளுக்கு இடையே போர் நீடித்து வருகிறது.
ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஈரான் மீது கடந்த 13ம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, அணு சக்தி நிலைகளை குறி வைத்து துல்லியமாக தாக்குதல் நடத்திய வருகிறது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதலை தொடங்கியுள்ளது. 3வது நாளாக நீடிக்கும் இந்தப் போரில் ஈரானின் ராணுவ தலைமையகம் மற்றும் அணுசக்தி நிலைகளை குறித்து இஸ்ரேல் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இதுவரையில் ஈரானில் 80 பேரும், இஸ்ரேலில் 10 பேரும் உயிரிழந்தனர்.
அதேபோல, ஈரானும் இஸ்ரேலின் ஜெருசலம், டெல் அவிவ் நகரில் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் தாக்குதலுக்கான சைரன் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மேலும், இஸ்ரேலின் எரிசக்தி உள்கட்டமைப்புகள், போர் விமானங்களுக்கு எரிபொருள் தயாரிப்பு நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, பாதுகாப்பு நடவடிக்கையாக 3வது நாளாக இஸ்ரேல் வான் எல்லைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள தென் பார்ஸ் பகுதியில் கத்தாருடன் சேர்ந்து மிகப்பெரிய அளவில் எரிவாயு சேமிப்பு மையத்தை அமைத்துள்ளது. இதன்மூலம் உள்நாட்டு இயற்கை எரிவாயு தேவையில் 70% பூர்த்தி செய்யப்படுகிறது.
இப்படியிருக்கையில் இந்தத் தளத்தின் மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, "இந்த தாக்குதல் மிகப்பெரிய தவறு. அரேபிய வளைகுடாவில் மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானுக்கு வெளியே இந்தப் போரை விரிவுபடுத்த இஸ்ரேல் முயற்சிக்கிறது," இவ்வாறு அவர் கூறினார்.



மேலும்
-
சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை பணி...புறக்கணிப்பு: 4 மாத ஊதியம் தராததால் பணியாளர்கள் விரக்தி
-
குன்றத்துாரில் நெரிசலை குறைக்க ஒரு வழி பாதையாக மாற்றம்
-
இரும்பு தடுப்புகளால் போக்குவரத்து நெரிசல்
-
காகித பொம்மை தயாரிப்பாளர்கள் புவிசார் குறியீடுக்கு காத்திருப்பு அறிவிப்பு வெளியிட்டு 2 ஆண்டுகளாகியும் கிடைக்கல
-
பவளவண்ணர் கோவில் குளத்தில் துாய்மை பணி
-
மாதிரி ராக்கெட் ஏவும் திட்டம்; உ.பி.,யில் வெற்றிகர சோதனை