ஆட்டுச்சந்தைக்கு கொட்டகை அமைக்க வலியுறுத்தல்
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஆட்டு சந்தையில் வரி வசூலிக்கும் பேரூராட்சி நிர்வாகம், ஆடுகளை மழை, வெயிலில் இருந்து பாதுகாக்கும் கொட்டகை அமைத்து தர வியாபாரிகள் வலியுறுத்து உள்ளனர்.
வாரந்தோறும் முதல் நாள் (திங்கள்தோறும்) ஆண்டிபட்டி வாரச்சந்தையில் நடக்கும் ஆட்டுச்சந்தை மாவட்ட அளவில் பெரிய சந்தையாகும். சாதாரண நாட்களில் 500 முதல் 700 வரையும், தீபாவளி, தைப்பொங்கல், ஆடி மற்றும் உள்ளூர் பொங்கல் காலங்களில் 2000க்கும் மேற்பட்ட ஆடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள், வியாபாரிகள் வந்து செல்கின்றனர். ஆட்டுச்சந்தை திறந்த வெளியில் இருப்பதால் மழைக் காலங்களில் ஆடுகள், வியாபாரிகள் பாதிப்படைகின்றனர்.
வியாபாரிகள் கூறியதாவது: ஆண்டிபட்டி ஆட்டுச்சந்தையில் விற்பனைக்கு வரும் ஆடுகளுக்கு தலா ரூ.50 வரை வரி வசூல் செய்யப்படுகிறது. ஆனால் சந்தையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. ஆடுகள், வியாபாரிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. வாரச் சந்தையில் ஆட்டுச் சந்தை நடக்கும் இடத்தில் நிரந்தர கூடாரம் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்., என்றனர்.
மேலும்
-
ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு; கோல்கட்டா ஓடுபாதையில் 1 மணி நேரம் நிறுத்தி வைப்பு
-
போரை விரிவுபடுத்த சதி செய்யும் இஸ்ரேல்; ஈரான் குற்றச்சாட்டு
-
கர்நாடகா, டில்லி, மஹாராஷ்டிரா கேரளாவில் கொட்டி தீர்த்தது கனமழை; 10 பேர் பலி
-
நிலம் தருவதாக ரூ.2,700 கோடி மோசடி: ராஜஸ்தான் சகோதரர்கள் தப்பி ஓட்டம்
-
பாக்., ராணுவ தளபதிக்கு அழைப்பா: தவறான தகவல் என அமெரிக்கா மறுப்பு
-
ஆயுத தொழிற்சாலை அருகில் வசிக்கும் மக்கள் வெளியேறுங்கள்: இஸ்ரேல் கடும் எச்சரிக்கை