ஒரே நாளில் 3132 வழக்குகளுக்கு தீர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் நடந்த 'லோக் அதாலத்'நிகழ்ச்சிகளில் ஒரே நாளில் 3132 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.முன் வழக்குகள், முடிவுக்கு வராத வழக்குகள், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் 'லோக் அதாலத்'நிகழ்ச்சி மாவட்டத்தில் உள்ள 14 நீதிமன்றங்களில் நேற்று நடந்தது.
திண்டுக்கலில் மாவட்ட நீதிபதி முத்துசாரதா தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் 3132 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
இழப்பீடு தொகையாக ரூ.11 கோடி 66 லட்சத்து 97 ஆயிரத்து 632 வழங்கப்பட்டது.திண்டுக்கல்லில் மாவட்ட நீதிபதி முத்துசாரதா வாகன விபத்தில் காயமடைந்தவருக்கு ரூ.36 லட்சத்து 60 ஆயிரம் இழப்பீடு தொகையை வழங்கினார் .
அனைவருக்கும் கபசுரக்குடி நீர் வழங்கப்பட்டது.நீதிபதிகள் சரண், வேல்முருகன், விஜயகுமார், முரளிதரன், கோகுல கிருஷ்ணன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் திரிவேணி கலந்துகொண்டனர்.
மேலும்
-
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு: சீனா செல்கிறார் ராஜ்நாத்
-
ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு; கோல்கட்டா ஓடுபாதையில் 1 மணி நேரம் நிறுத்தி வைப்பு
-
போரை விரிவுபடுத்த சதி செய்யும் இஸ்ரேல்; ஈரான் குற்றச்சாட்டு
-
கர்நாடகா, டில்லி, மஹாராஷ்டிரா கேரளாவில் கொட்டி தீர்த்தது கனமழை; 10 பேர் பலி
-
நிலம் தருவதாக ரூ.2,700 கோடி மோசடி: ராஜஸ்தான் சகோதரர்கள் தப்பி ஓட்டம்
-
பாக்., ராணுவ தளபதிக்கு அழைப்பா: தவறான தகவல் என அமெரிக்கா மறுப்பு