ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு: சீனா செல்கிறார் ராஜ்நாத்

புதுடில்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவில் நடைபெற உள்ளது. இந்த அமைப்பில் இந்தியாவும் உறுப்பினர் ஆக உள்ளது. இந்த அமைப்பின் மாநாடு இந்த மாத இறுதியில் சீனாவின் குயிங்டாவ் நகரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும்படி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அழைப்பு வந்துள்ளது. இதனை ஏற்று ராஜ்நாத் சீனா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வானில், இந்தியா- சீனா வீரர்களுக்கு இடையே நடந்த மோதலுக்கு பிறகு ராஜ்நாத் சிங் சீனா செல்வது இதுவே முதல்முறையாகும். இந்த மோதலுக்கு பிறகு நிலைமையை சரி செய்ய இருநாட்டு உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும்
-
குழாய் வழியே கிருஷ்ணா நீர் பெறும் திட்டத்தை...கைவிட்டது அரசு:மாநிலத்தின் நிதி ஆதாரம் சரியில்லாததால் முடிவு
-
பகிங்ஹாம் கால்வாயில் பாலம் கட்ட அனுமதி கோரி கடலோர ஒழுங்குமுறை குழுமத்திடம் விண்ணப்பம் இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., இணைப்புக்கு திட்டம்
-
தடைக்காலம் முடிந்ததால் காசிமேடு மீனவர்கள் 'குஷி' ஆழ்கடலில் மீன்பிடிக்க விரைந்த விசைப்படகுகள்
-
நாட்டு இன நாய்கள் பாதுகாப்பு மைய கட்டுமான பணி இழுபறி
-
சாஸ்திரி பவன் கழிப்பறையில் மயங்கி கிடந்த பெண்கள்
-
கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி