ரபேல் விமானங்களை வீழ்த்தியதாக பாக். சொல்வது பொய்: உறுதிப்படுத்தியது டசால்ட் நிறுவனம்

13

பாரிஸ்: ஆபரேஷன் சிந்தூரின் போது ரபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது பொய் என்று டசால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


@1brபஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றதை பலரும் கொண்டாடினர். ஆனால் பாகிஸ்தான் மட்டுமே இந்தியாவின் ரபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறிக் கொண்டே இருந்தது. இது பொய்யான தகவல் என்று மத்திய அரசு அப்போதே மறுத்துவிட்டது.



@quote@இந்நிலையில் ரபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது பொய் என்று ரபேல் விமானங்களை உற்பத்தி செய்யும் டசால்ட் நிறுவன முதன்மை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவித்துள்ளார்.பிரான்ஸில் இதழ் ஒன்றுக்கு அவர் பேட்டி அளிக்கையில் இதை தெளிவுப்படுத்தி உள்ளார். quote


இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது;
டசால்ட் நிறுவனத்திற்கு இந்திய விமானப்படையிடம் இருந்து போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் எங்களுக்கு வரவில்லை. 3 ரபேல் போர் விமானங்களை தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் கூறுவது தவறானது என்று எங்களுக்கு ஏற்கனவே தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement