தி.மு.க.,வின் அகங்கார செயல்பாடு: அண்ணாமலை கண்டனம்

சென்னை: கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்களை பயன்படுத்த முயற்சிக்கும், தி.மு.க.,வின் அகங்காரச் செயல்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக தமிழக பா.ஜ., முன்னாள் தலைலலவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சமத்தூர் ராமஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்களை, நான் முதல்வன் திட்டம் என்று பொய் கூறி திமுக கட்சி நிகழ்ச்சிக்கு வர வற்புறுத்தியிருக்கிறார் அந்தப் பகுதி திமுக கவுன்சிலரின் கணவர்.
கட்டிட வேலை செய்ய வைப்பது, கழிப்பறைகளை கழுவச் செய்வது, பள்ளியை சுத்தம் செய்வது என, அரசுப் பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தி வருகிறது திமுக அரசு. பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை.
@twitter@ https://x.com/annamalai_k/status/1934171286990979382twitter
இந்த நிலையில், திமுக கட்சி நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்க, அரசுப் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்த முயற்சிக்கும், திமுகவின் அகங்காரச் செயல்பாட்டினை, வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.


மேலும்
-
முன்னாள் முதல்வர் ரூபானி உடல் மரபணுவால் அடையாளம் தெரிந்தது
-
விரதமிருந்து மாநாட்டில் பங்கேற்க வேண்டும் பா.ஜ., மாநில தலைவர் 'அழைப்பு'
-
கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
-
அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப 'அப்டேட்' அவசியம்: பட்டம் பெற்ற டாக்டர்களுக்கு அமைச்சர் அறிவுரை
-
அடையாளம் தெரியாத முதியவர் இறப்பு
-
நடியப்பட்டு பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு