கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
போத்தனுார்'; கோவை, குனியமுத்துார் அடுத்த பி.கே.புதூர், மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் அர்ஜுனன், 55; குழப்பழக்கமுடையவர். தினமும் போதையில் மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். அதுபோல் கடந்த 12ம் தேதி, தான் புதியதாக கட்டும் வீட்டில் கட்டுமான பணி செய்வோருக்காக மது வாங்கி வந்தார்.
இதுகுறித்து, அவரது மனைவி சண்முகவல்லி கேட்டபோது தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அர்ஜுனன், அவரை திட்டி, மரக்கட்டையால் தாக்கினார். அவரது மகன் தடுத்துள்ளார்.
அர்ஜுனன் அங்கிருந்த அரிவாளை எடுத்து கொலை மிரட்டல் விடுத்தார். மகனை வெட்ட துரத்தினார். அவர் தப்பியோடினார்.
சண்முகவல்லி குனியமுத்துார் போலீசில் புகார் செய்தார். விசாரித்த போலீசார் அர்ஜுனனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.74,440!
-
ரோடு ஷோவிலும், போட்டோஷூட்டிலும் மட்டுமே கவனம்: முதல்வரை சாடிய இ.பி.எஸ்.,!
-
விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்!
-
தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு; அவலாஞ்சியில் 292 மி.மீ., மழைப்பதிவு!
-
நிரம்பியது பில்லூர் அணை: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
-
நடுவானில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு; லண்டன்- சென்னை விமான சேவை பாதிப்பு
Advertisement
Advertisement