தெலங்கானாவில் ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

கரீம்நகர்: தெலங்கானாவில் கோதாவரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து பைன்சா காவல்நிலைய உதவி காவல் கண்காணிப்பாளர் அவினாஷ் கூறியதாவது; ஹைதராபாத்தில் இருந்து 20 பேர் பசாராவில் உள்ள பிரபல ஞான சரஸ்வதி கோவிலில் தரிசிக்க வந்துள்ளனர். கோவிலில் வழிபாடு நடத்துவதற்கு முன்பு கோதாவரி ஆற்றில் புனித நீராடியுள்ளனர். அப்போது, ஆற்றில் வெள்ளத்தின் அளவு திடீரென அதிகரித்துள்ளது. இதில், 5 அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த பிறகு, தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் ராகேஷ், வினோத், மதன், ருதிக், பரத் ஆகியோர் என தெரிய வந்துள்ளது, இவ்வாறு கூறினார்.
ஆன்மிக சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
ஏற்காட்டில் பனிமூட்டத்தால் 'மறைந்த' ஏரி மதியம் வரை பெடல் படகு சவாரி நிறுத்தம்
-
'அரசியல் கட்சி கூட்டங்களின் போது கடைகளை மூட சொல்லக்கூடாது'
-
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு நாமக்கல்லில் 4,620 பேர் பங்கேற்பு
-
தி.மலை கோவிலில் தள்ளுமுள்ளு பெண் பக்தர் மண்டை உடைந்தது
-
பெண் பலாத்கார முயற்சி போதை ஆசாமி கைது
-
டி.என்.பாளையம் அருகே சிறுத்தை கடித்து 2 ஆடுகள் பலி; 5 ஆடுகள் காயத்தால் பீதி