தெலங்கானாவில் ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

கரீம்நகர்: தெலங்கானாவில் கோதாவரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


இது குறித்து பைன்சா காவல்நிலைய உதவி காவல் கண்காணிப்பாளர் அவினாஷ் கூறியதாவது; ஹைதராபாத்தில் இருந்து 20 பேர் பசாராவில் உள்ள பிரபல ஞான சரஸ்வதி கோவிலில் தரிசிக்க வந்துள்ளனர். கோவிலில் வழிபாடு நடத்துவதற்கு முன்பு கோதாவரி ஆற்றில் புனித நீராடியுள்ளனர். அப்போது, ஆற்றில் வெள்ளத்தின் அளவு திடீரென அதிகரித்துள்ளது. இதில், 5 அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.


இது குறித்து தகவல் அறிந்த பிறகு, தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் ராகேஷ், வினோத், மதன், ருதிக், பரத் ஆகியோர் என தெரிய வந்துள்ளது, இவ்வாறு கூறினார்.


ஆன்மிக சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement