பெண் பலாத்கார முயற்சி போதை ஆசாமி கைது
ஒடுகத்துார்: வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தங்கி பணியாற்றி வருகிறார். இவருக்கு, 36 வயதில் ஒரு மனைவி, மற்றும் மகன், மகள் உள்ளனர். மகனும், மகளும் வேலை மற்றும் படிப்பு காரணமாக வெளியூரில் தங்கியுள்ளனர்.
இதனால், தொழிலாளியின் மனைவி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ஒடுகத்துாரை சேர்ந்த ஜெய்சங்கர், 55, என்பவர், மது போதையில் வீட்டிற்குள் நுழைந்து, 36 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அதிர்ச்சியடைந்த அவர் போட்ட கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால், ஜெய்சங்கர் தப்பினார். வேப்பங்குப்பம் போலீசார், ஜெய்சங்கரை நேற்று கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெருவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!
-
முழு பதிலடி கொடுப்போம்; போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஏற்க ஈரான் மறுப்பு
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.74,440!
-
ரோடு ஷோவிலும், போட்டோஷூட்டிலும் மட்டுமே கவனம்: முதல்வரை சாடிய இ.பி.எஸ்.,!
-
விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்!
-
தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு; அவலாஞ்சியில் 292 மி.மீ., மழைப்பதிவு!
Advertisement
Advertisement