நிரம்பியது பில்லூர் அணை: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மேட்டுப்பாளையம்: கோவை, திருப்பூருக்கு குடிநீர் வழங்கும் பில்லூர் அணை நிரம்பி வழிகிறது. பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
கோவை, நீலகிரி மாவட்ட எல்லையில், வனப்பகுதியில் உள்ள பில்லூர் அணையின் நீர்மட்ட உயரம், 100 அடியாகும். கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் முக்கிய குடிநீர் ஆதாரமாக இந்த அணை அமைந்துள்ளது.
அணையின் பாதுகாப்பு நலன் கருதி, 97 அடிக்கு நீர்மட்டம் உயரும்போது, அணை நிரம்பியதாக அறிவிக்கப்படுவது வழக்கம். அதன் பின் அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும் நான்கு மதகுகள் மற்றும் பவானி ஆற்றில் திறந்து விடுவர்.
நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நேற்று இரவு பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று மாலை அணையின் நீர்மட்டம் 82.25 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. இரவு, 11:00 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
நள்ளிரவு 2:30 மணிக்கு அணையின் முழு கொள்ளளவான, 97 அடியை எட்டி அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும் அப்படியே நான்கு மதங்கள் வழியாகவும், மின்சாரம் உற்பத்தி செய்யவும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணையில் இருந்து நான்கு மதகுகள் வழியாக தலா, 2 ஆயிரம் கன அடியும், மின்சாரம் உற்பத்தி செய்ய, 6000 கன அடியும் தண்ணீரும் என மொத்தம் 14 ஆயிரத்து 160 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (6)
வல்லவன் - ,
16 ஜூன்,2025 - 15:06 Report Abuse

0
0
Reply
lana - ,
16 ஜூன்,2025 - 12:04 Report Abuse

0
0
Reply
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
16 ஜூன்,2025 - 10:16 Report Abuse

0
0
Reply
Manaimaran - ,
16 ஜூன்,2025 - 09:30 Report Abuse

0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
16 ஜூன்,2025 - 08:43 Report Abuse

0
0
R Viswanathan - ,
16 ஜூன்,2025 - 12:04Report Abuse

0
0
Reply
மேலும்
-
முத்தமிட முயன்றவரின் நாக்கை கடித்த பாம்பு: சமூக வலைதள மோகத்தால் விபரீதம்
-
ஊனமுற்றவர்களுக்கு உதவும் ரிஷிகிருஷ்ணா
-
இஸ்ரோ மையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்; தேடுதல் வேட்டை தீவிரம்
-
பா.ம.க.,வை பலவீனப்படுத்த முயற்சிக்கும் தி.மு.க.,: அன்புமணி குற்றச்சாட்டு
-
விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா: முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி
-
இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு
Advertisement
Advertisement