மண் கடத்திய லாரி பறிமுதல்

ஓசூர்: ஓசூர் டவுன் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஸ்ரீதர் மற்றும் போலீசார், பழைய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ பகுதியில் வாகன சோதனை செய்தனர்.

அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், ஒரு யூனிட் எம்.சாண்ட் எடுத்து செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய சூளகிரியை சேர்ந்த டிரைவர் திம்மராஜ், 25, ஓசூர் ராயக்கோட்டை வீட்டு வசதி வாரிய பகு-தியை சேர்ந்த உரிமையாளர் மோகன், 35, ஆகியோரை தேடி வருகின்றனர்.

Advertisement