குடியிருப்போர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்




ஓசூர்: ஓசூர் மாநகராட்சி, 13வது வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணா நகர் குடியிருப்போர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் முத்துவேல் தலைமை வகித்தார்.

பொதுச்செயலாளர் வேம்புராஜன், கடந்த இரு ஆண்டுகளாக நடந்த சங்கத்தின் நட-வடிக்கைகளை அறிக்கையாக வாசித்தார். பொருளாளர் ஜெயராஜ், வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். தொடர்ந்து, சங்-கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.இதில் தலைவராக பதுவைராஜ், இணைத்தலைவராக கோபால், பொதுச்செயலாளராக நுார்முகமது, பொருளாளராக சுப்பிரம-ணியம், துணைத்தலைவர்களாக பாஸ்கர், ஜெயராஜ், பிரபு, துணை செயலாளர்களாக ராமச்சந்திரன், சங்கர், கணேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement