தி.மு.க., 'பார்முலா' சேலத்தில் எடுபடாது அ.தி.மு.க., புறநகர் மாவட்ட செயலர் 'பளிச்'

ஆத்துார்: ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம் மற்றும் வரும், 21ல் கருமந்துறையில், அ.தி.மு.க., சார்பில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து, ஆத்துாரில் ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. அதற்கு தலைமை வகித்து, சேலம் புறநகர்

மாவட்ட செயலர் இளங்-கோவன் பேசியதாவது:அ.தி.மு.க., - பா.ஜ., வலுவான கூட்டணியால், தி.மு.க.,வுக்கு பயம் வந்துவிட்டது. 2011 போன்று, 2026ல், தி.மு.க., எதிர்க்கட்-சியாக கூட இல்லாத நிலை உருவாகும். சேலத்துக்கு நேரு, வேலு யார் வந்தாலும், அ.தி.மு.க.,வை எதிர்த்து வெற்றி பெறமு-டியாது. சேலத்தில், 15 ஆண்டாக, தி.மு.க., வெற்றி பெற முடிய-வில்லை என, தற்போது, தி.மு.க., பொறுப்பாளராக வந்துள்ள அமைச்சர் வேலுவும், கட்சியினரிடம் புலம்பியுள்ளார்.
பென்னாகரம், திருமங்கலம் என, தி.மு.க.,வின் எந்த, 'பார்மு-லா'வும் சேலத்தில் எடுபடாது. அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., 'பார்முலா' தான் வெற்றி பெறும். கல்வராயன்ம-லையில் அதிகளவில் மரங்கள் வெட்டி கடத்தப்படுகின்றன.
பட்டா, கறவை மாடு வாங்கி தருவதாக, மோசடி செய்த ஆளுங்-கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்-ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 21ல், கருமந்துறையில் கண்-டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், ஏற்காடு சித்ரா, கெங்கவல்லி நல்லதம்பி, ஒன்றிய, கிளை செயலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement