மகன் மாயம் தந்தை புகார்

குளித்தலை: குளித்தலை அடுத்த திருக்காம்புலியூர், தேவேந்திர தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன், 42; கொத்தனார்.


இவரது மகன் கஜேந்திரன், 17; கடந்த, 12 மதியம், 2:00 மணிக்கு வீட்டில் இருந்த தந்தையிடம் மொபைல் போன் கேட்டு சண்டையிட்டுள்ளார். அதற்கு தந்தை விஸ்வநாதன், 'பொறுமையாக இரு; வாங்கி தருகிறேன்' எனக்கூறியுள்ளார். இதனால் கோபித்துக்கொண்ட கஜேந்திரன், திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தந்தை கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார், மாயமான கஜேந்திரனை தேடி வருகின்றனர்.

Advertisement