அம்மன் கோவில்களில் தீர்த்தக்குட ஊர்வலம்
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை கள்ளப்பள்ளி தெற்கு கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு, கள்ளப்பள்ளி தெற்கு கிராம பகுதி மக்கள் லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு லாலாப்பேட்டை வழியாக கோவிலுக்கு சென்று, அம்மன் சன்னதியில் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலை, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடக்கிறது.
* வயலுார் பஞ்., கோடங்கிப்பட்டி கிராமத்தில் உள்ள பகவதியம்மன், பாம்பலம்மன் ஆகிய சுவாமிகள் கோவில் திருவிழாவை முன்னிட்டு குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பின், அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அதை தொடர்நது, பகவதியம்மன், பாம்பலம்மன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மேலும்
-
இஸ்ரோ மையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்; தேடுதல் வேட்டை தீவிரம்
-
பா.ம.க.,வை பலவீனப்படுத்த முயற்சிக்கும் தி.மு.க.,: அன்புமணி குற்றச்சாட்டு
-
விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா: முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி
-
இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு
-
மருத்துவத் துறையின் சீரழிவுக்கு தி.மு.க., அரசு தான் பொறுப்பு; அன்புமணி
-
சிறுவன் கடத்தல் வழக்கு; எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தி, ஏ.டி.ஜி.பி., ஆஜராக உத்தரவு