அங்கன்வாடி கட்டடம் சேதம் பராமரிக்க வேண்டுகோள்

கரூர்: கரூர், தான்தோன்றிலை ஊராட்சி ஒன்றியத்தில், பி.வெள்ளாளப்பட்டி அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இதில், 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக கட்டடம் பராமரிப்பு இன்றி சேதமடைந்துள்ளது. இந்த மையத்தில் மேற்கூரை ஆஸ்பெட்டாஸ் சீட்டு போடப்பட்டுள்ளது. அந்த மேற்கூரை சேதமடைந்துள்ளதால், மழை பெய்யும் போது தண்ணீர் மையத்திற்குள் விழுகிறது. தரைத்தளம் மிகவும் சிதிலமடைந்து மேடு, பள்ளமுமாக காணப்படுகிறது. மூன்று மின் விசிறிகளில், இரண்டு பழுதடைந்துள்ளன.


குடிநீர் இயக்கும் மின் மோட்டார் பழுதடைந்து விட்டது. ஜன்னல் மற்றும் கதவுகள் சேதமாகி கிடக்கிறது. குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் ஏதும் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் கிடையாது. அங்கன்வாடி கட்டடம் முழுவதும் சேதமடையும் முன் பராமரிப்பு செய்ய வேண்டும். அவ்வாறு சீரமைக்க முடியவில்லை என்றால், புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement