அங்கன்வாடி கட்டடம் சேதம் பராமரிக்க வேண்டுகோள்
கரூர்: கரூர், தான்தோன்றிலை ஊராட்சி ஒன்றியத்தில், பி.வெள்ளாளப்பட்டி அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இதில், 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக கட்டடம் பராமரிப்பு இன்றி சேதமடைந்துள்ளது. இந்த மையத்தில் மேற்கூரை ஆஸ்பெட்டாஸ் சீட்டு போடப்பட்டுள்ளது. அந்த மேற்கூரை சேதமடைந்துள்ளதால், மழை பெய்யும் போது தண்ணீர் மையத்திற்குள் விழுகிறது. தரைத்தளம் மிகவும் சிதிலமடைந்து மேடு, பள்ளமுமாக காணப்படுகிறது. மூன்று மின் விசிறிகளில், இரண்டு பழுதடைந்துள்ளன.
குடிநீர் இயக்கும் மின் மோட்டார் பழுதடைந்து விட்டது. ஜன்னல் மற்றும் கதவுகள் சேதமாகி கிடக்கிறது. குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் ஏதும் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் கிடையாது. அங்கன்வாடி கட்டடம் முழுவதும் சேதமடையும் முன் பராமரிப்பு செய்ய வேண்டும். அவ்வாறு சீரமைக்க முடியவில்லை என்றால், புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்
-
முத்தமிட முயன்றவரின் நாக்கை கடித்த பாம்பு: சமூக வலைதள மோகத்தால் விபரீதம்
-
ஊனமுற்றவர்களுக்கு உதவும் ரிஷிகிருஷ்ணா
-
இஸ்ரோ மையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்; தேடுதல் வேட்டை தீவிரம்
-
பா.ம.க.,வை பலவீனப்படுத்த முயற்சிக்கும் தி.மு.க.,: அன்புமணி குற்றச்சாட்டு
-
விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா: முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி
-
இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு