10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்; சைப்ரஸில் தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு

லிமாசோல்: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட பொருளாதார மற்றும் தொழில்துறை சீர்திருத்தங்கள் குறித்து இந்தியா, சைப்ரஸ் நாடுகளின் தொழிலதிபர்களுடனான சந்திப்பின் போது பிரதமர் மோடி எடுத்துக் கூறினார்.
சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாடாக, சைப்ரசுக்கு அவர் சென்றுள்ளார். பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் நேரில் வரவேற்றார். 20 ஆண்டுகளுக்கு பின், சைப்ரசுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
தொடர்ந்து, லிமாசோலில் இருநாட்டு தொழிலதிபர்களையும் சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸூடன் இணைந்து பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, எரிசக்தி, தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இது குறித்து பிரதமர் மோடி விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், "வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தும் விதமாக, நானும், அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸூம் இணைந்து, இந்தியா, சைப்ரஸ் நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறை நிறுவனங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினோம். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட பொருளாதார மற்றும் தொழில்துறை சீர்திருத்தங்கள் குறித்து விவரித்தேன்," எனக் கூறினார்.

மேலும்
-
இஸ்ரோ மையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்; தேடுதல் வேட்டை தீவிரம்
-
பா.ம.க.,வை பலவீனப்படுத்த முயற்சிக்கும் தி.மு.க.,: அன்புமணி குற்றச்சாட்டு
-
விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா: முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி
-
இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு
-
மருத்துவத் துறையின் சீரழிவுக்கு தி.மு.க., அரசு தான் பொறுப்பு; அன்புமணி
-
சிறுவன் கடத்தல் வழக்கு; எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தி, ஏ.டி.ஜி.பி., ஆஜராக உத்தரவு