மரம் முறிந்து விழுந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு

குளித்தலை, குளித்தலையில், மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

குளித்தலை, உழவர் சந்தை அண்ணா நகர் புறவழிச் சாலையில், கடுமையான சூறாவளி காற்று வீசியதில் ரயில்வே பிளாட்பாரம் அருகில் இருந்த புளியமரம் நேற்று காலை, 8:30 மணியளவில் முறிந்து விழுந்தது.


இதனால் புறவழிச்சாலையில், பைக், கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், மினி பஸ் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விழுந்த மரத்தை சரி செய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Advertisement