நாங்கள் வெற்றிப் பாதையில் இருக்கிறோம்: சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

ஜெருசலேம்: நாங்கள் வெற்றிப் பாதையில் இருக்கிறோம், இது அடையப்பட்டு வருகிறது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தி சேனலுக்கு பெஞ்சமின் நெதன்யாகு அளித்த பேட்டி: ஈரான் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல்களை அழிக்கும் இலக்குகளை அடைவதற்கான பாதையில் இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது. ஈரானில் இருந்து இரவு நேரத்தில் ஏவப்பட்ட 120க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் அழித்தது. விமானப்படை தெஹ்ரானின் வான்வெளியைக் கட்டுப்படுத்துகிறது.
நாங்கள் வெற்றிப் பாதையில் இருக்கிறோம், இது அடையப்பட்டு வருகிறது. எங்கள் வீரமிக்க விமானிகள் மற்றும் எங்கள் அற்புதமான தரைப்படை குழுவினருக்கு நன்றி, அவர்களும் அற்புதமான பணிகளைச் செய்கிறார்கள். இஸ்ரேல் பொதுமக்களை தாக்கும் ஈரானைப் போலல்லாமல், இஸ்ரேல் ஈரான் ஆட்சியின் இலக்குகளை மட்டுமே தாக்குகிறது.
தெஹ்ரான் மீது வானத்தை நாம் கட்டுப்படுத்தும்போது, நமது குடிமக்களை குறி வைத்து குழந்தைகள் மற்றும் பெண்களை ஈரான் கொல்ல முயற்சிக்கிறது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமெனியைக் கொல்வது இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வரும். இஸ்ரேலின் தொடர்ச்சியான ராணுவ நடவடிக்கைகள் மோதலை அதிகரிப்பதற்குப் பதிலாக, முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
@block_P@
1989ல் ஆயத்துல்லா ருஹோல்லா காமேனி இறந்ததிலிருந்து ஈரானின் உச்ச தலைவரான ஆயத்துல்லா கமேனி, தடைகளை எதிர்கொண்டு ஆட்சி செய்து வருகிறார். இவரது ஆட்சி காலத்தில் சர்வதேச பதட்டங்கள் தொடர்ந்து நிலவுகின்றன.block_P

மேலும்
-
விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு; கைதான ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட்
-
இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு; ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்; ஜி 7 மாநாட்டில் தீர்மானம்
-
இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்: விமான விபத்து குறித்து ரஜினி வேதனை பேட்டி
-
இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார்; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடிக் காரணம் இதுதான்!
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு; ஒரு சவரன் ரூ.73,600!
-
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்