காளிங்கராயன் அணைக்கட்டில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

பவானி, பவானி அருகே காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து முதல் போக பாசனத்துக்கு, நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. வரும் அக்., 13ம் தேதி வரை, 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.


இதன் மூலம், 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். ஈரோடு எம்.பி., பிரகாஷ், தண்ணீரை திறந்து வைத்தார். நிகழ்வில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement