சாமுண்டீஸ்வரி தரிசன கட்டணம் உயர்வை எதிர்த்து போராட்டம்

மைசூரு : சாமுண்டீஸ்வரியை தரிசிக்க கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து, கர்நாடக சேனா அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
கன்னட ஆடி மாதமான ஆஷாடா மாதம், இம்மாதம் 26ம் தேதி துவங்குகிறது. ஆஷாடா மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமைகளில் மைசூரு சாமுண்டீஸ்வரியை தரிசிக்க பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவர்.
இதற்காக, 2,000 ரூபாயில் பேக்கேஜ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், நேற்று கர்நாடக சேனா அமைப்பை சேர்ந்தவர்கள், மைசூரு பழைய கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.
அப்போது, கட்டண உயர்வை திரும்ப பெறவும்; சாமுண்டி மலையில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவும் கோரி முழக்கங்கள் எழுப்பினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கர்நாடக துணை முதல்வர்; விழிப்புணர்வு பயணத்தில் ஒரு வேடிக்கை
-
திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; எதை சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
-
2026ல் தமிழகத்தை கையில் எடுப்போம்; நயினார் நாகேந்திரன் சூசகம்!
-
ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் புறப்பட்ட அதிபர் டிரம்ப்; பிரான்ஸ் அதிபர் மீது கடும் சாடல்!
-
மங்களூருவில் ஒரு மழைக்கே தாங்காத மேம்பாலம்; திறப்பு விழா கண்ட 15 நாட்களில் கசிவு
-
விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு; கைதான ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட்
Advertisement
Advertisement