அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலுள்ள குறைபாடுகளை நீக்கக் கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முபாரக் அலி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சுகந்தி கோரிக்கை விளக்கவுரை நிகழ்த்தினார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மருத்துவ சிகிச்சைபெறும் என்.ஹெச்.ஐ.எஸ்., திட்டத்திலுள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும்.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டு முதல் தற்போது வரை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முழுமையாக பயன்பெற முடியவில்லை.
2025 ஜூலை முதல் புதுப்பிக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், அனைவருக்கும் பயன்பெறும் வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
மாவட்ட நிர்வாகிகள் ராஜமாணிக்கம், மகாலிங்கம், மாநிலச் செயலர் ஜெசி கலந்து கொண்டனர்.
மேலும்
-
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்படி இருக்கும்? வெளியானது 3டி வீடியோ!
-
முற்றியது போர்; ஈரானின் முக்கிய தளபதி அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு
-
நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: கடைசி நேரத்தில் ரத்து
-
மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; வாலிபரை சுட்டுப் பிடித்தது போலீஸ்!
-
மன்னிப்பு கேட்கும்படி கமலுக்கு உத்தரவிட முடியாது; சுப்ரீம் கோர்ட்