செயல்படாத மகளிர் சுகாதார வளாகம்: சேதமான ரோடு--
தளவாய்புரம்; செப்பனிடாத ரோடு, செயல்படாத மகளிர் சுகாதார வளாகம், நுண் உரக்குடில் என ராஜபாளையம் அருகே முத்துச்சாமிபுரம் ஊராட்சி மக்கள் எண்ணற்ற பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
முத்துச்சாமிபுரம், காமராஜர் நகர், கோரையாறு காலனி, நீராத்துலிங்கம் நகர் கிராமங்களை அடக்கிய முத்துச்சாமிபுரம் ஊராட்சியில் குடிநீர் குழாய்க்கு தோண்டப்பட்ட ரோடு செப்பனிடாதது, வாறுகால் துார் வாராதது, ரேஷன் கடைக்கு அலைவது, குடிநீர் சப்ளை இடைவெளி அதிகம் போன்றவை முக்கிய பிரச்சினையாக உள்ளது.
காமராஜர் நகரில் புதிய பகுதிகளில் ரோடு வசதி இல்லை. கழிவுநீர் வெளியேற முறையாக வாறுகால் வசதியில்லை. குடியிருப்புகளில் வெளியேறும் சாக்கடை பள்ளி ஒட்டியுள்ள ஓடையில் கலந்து செல்ல வழி இல்லை. ஓடை துார் வாராமல் புதர் மண்டி உள்ளது.
முத்துச்சாமிபுரம் பெருமாள் கோயில், முகவூர் ரோட்டில் மேல்நிலைப்பள்ளி எதிர் பகுதிகளில் குவிக்கப்படும் குப்பையால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
ஊராட்சியின் குப்பை தரம் பிரிக்கும் அமைப்பு, நுண் உரக்குடில் செயல்படாமல் உள்ளதால் மலையை ஒட்டி ரோட்டோரம் குவித்து எரிக்கின்றனர். கோரையாறு காலனியில் பல ஆண்டு கோரிக்கைக்கு பின் தற்போது ரோடு, மின் விளக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விடுபட்ட இடங்களிலும் வசதி ஏற்படுத்த வேண்டும்.
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு; ஒரு சவரன் ரூ.73,600!
-
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்
-
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பெயரை பயன்படுத்தி மோசடி: வட மாநில வாலிபர் கைது
-
இஸ்ரேல் - ஈரான் போர் நீடித்தால் யாருக்கு பாதிப்பு?
-
'முத்த மழை' பாடல் வெர்ஷனில் அரசை விமர்சிக்கும் அ.தி.மு.க.,
-
தமிழகத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு எங்கே? இதோ முழு விபரம்!