புலி தாக்கி மிளாமான் பலி

மூணாறு; மூணாறு அருகே வட்டவடையில் குடியிருப்புகளுக்கு அருகே புலி, மிளா மானை தாக்கி கொன்றதால் மக்கள் அச்சம் அடைந்தனர். வட்டவடையில் கோவிலூர் கிராமத்தையொட்டி தலவிஞ்சி பகுதியில் நேற்று காலை மிளா மான் இறந்த நிலையில் கிடந்தது. அதன் உடல் பாதி தின்ற நிலையில் காணப்பட்டதால் புலி, மிளாவை தாக்கி கொன்றதாக தெரியவந்தது. அதனை சம்பவ இடத்தில் ஆய்வு நடத்திய வனத்துறையினர் உறுதி செய்தனர்.

Advertisement