முதல்வர் வழங்கிய பட்டாவில் முறைகேடு எனக்கூறி முற்றுகை

தஞ்சாவூர்:தஞ்சாவூரில், முதல்வர் வழங்கிய வீட்டு மனைப்பட்டாவில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, பூதலுார் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் தொண்டராயன்பாடியைச் சேர்ந்த 150 பேர், இலவச வீட்டு மனை பட்டாவுக்கு விண்ணபித்தனர். ஆனால், வருவாய் துறையினர் வசதி படைத்தவர்கள் 40 பேரை தேர்வு செய்தனர். இவர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் தஞ்சாவூரில் நேற்று முன்தினம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்.
இந்நிலையில், மிகவும் பின்தங்கிய நிலையில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்த நுாற்றுக்கணக்கானோர், பூதலுார் தாசில்தார் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முறைகேடு செய்த சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் மீதும், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷமிட்டனர்.
தொடர்ந்து, துணை தாசில்தார் சாந்தி, மண்டல துணை தாசில்தார் உஷாராணி ஆகியோர் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, ஒரு வாரத்துக்குள் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என, உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
பூதலுார் தாசில்தார் கலைச்செல்வி கூறுகையில், “மக்கள் தெரிவித்துள்ள புகார் ஆய்வு செய்யப்படும். தவறுதலாக இருக்கும் பட்டாக்கள் நீக்கம் செய்யப்படும். புதிய வீட்டு மனை பட்டா விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியுள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்படும்,” என்றார்.
மேலும்
-
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: மழைக்கு வாய்ப்பு
-
முருக பக்தர்கள் மாநாடு: மதுரை செல்ல சிறப்பு ரயில்
-
'கால் டாக்சி' விதிமுறைகள்: 5 ஆண்டுகளாக அரசு தாமதம்
-
எச்.ஐ.வி., பாதித்த குழந்தைகளுக்கு உதவித்தொகை திட்டம் துவக்கம்
-
டென்ஷன் குறைய, வெற்றி கைகூட பரிகாரம் சிவப்பு சந்தன மாலை அணிந்தார் விஜய்
-
மாணவர் மீது 'போக்சோ' வழக்கு