தண்டவாளத்தில் இரும்புக்கம்பி ஏற்காடு ரயிலை கவிழ்க்க சதி
இடைப்பாடி: ஈரோட்டில் இருந்து சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு, 9:30 மணிக்கு, சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி, அ.தாழையூரில் வந்தபோது பெரிய சத்தம் எழுந்துள்ளது. லோகோ பைலட் உடனே ரயிலை நிறுத்தினார்.
தகவல் தரப்பட்டு ரயில்வே அதிகாரிகள் போலீசார், பார்த்தபோது, தண்டவாளம் குறுக்கே, 10 அடி நீள இரும்பு கம்பி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. ரயில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது, குறுக்கே இருந்த கம்பி, இஞ்ஜின் மீது மோதியுள்ளது. அந்த கம்பியையும் சேர்த்து இழுத்தபடி சென்றதால், பெரிய சத்தம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இஞ்ஜினின் முன்பகுதியை சரிசெய்து ரயில், 11:30 மணிக்கு புறப்பட்டது. தண்டவாளம் குறுக்கே இரும்பு கம்பியை வைத்தது யார், ரயிலை கவிழ்க்க சதி செய்தனரா என ரயில்வே போலீசார், மகுடஞ்சாவடி போலீசார் விசாரிக்கின்றனர். கேரளா எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - புனே, ஆலப்புழா - சென்னை ஆகிய ரயில்களும் 2 மணி நேரம் தாமதமாகின.
மேலும்
-
கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சாதனை; நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 8 பேருக்கு பாராட்டு
-
பாக். பிரச்னையில் மத்தியஸ்தம் தேவையில்லை; டிரம்பிடம் பிரதமர் மோடி திட்டவட்டம்
-
வலு அடைந்தது காற்றழுத்த தாழ்வு; தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
-
2 நாட்களாக இறக்கம் கண்ட தங்கம் விலை இன்று உயர்வு; சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு
-
டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
-
6 பேரை பலி வாங்கிய சிங்கம்புணரி குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம் விதிப்பு