தண்டவாளத்தில் இரும்புக்கம்பி ஏற்காடு ரயிலை கவிழ்க்க சதி

இடைப்பாடி: ஈரோட்டில் இருந்து சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு, 9:30 மணிக்கு, சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி, அ.தாழையூரில் வந்தபோது பெரிய சத்தம் எழுந்துள்ளது. லோகோ பைலட் உடனே ரயிலை நிறுத்தினார்.

தகவல் தரப்பட்டு ரயில்வே அதிகாரிகள் போலீசார், பார்த்தபோது, தண்டவாளம் குறுக்கே, 10 அடி நீள இரும்பு கம்பி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. ரயில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது, குறுக்கே இருந்த கம்பி, இஞ்ஜின் மீது மோதியுள்ளது. அந்த கம்பியையும் சேர்த்து இழுத்தபடி சென்றதால், பெரிய சத்தம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இஞ்ஜினின் முன்பகுதியை சரிசெய்து ரயில், 11:30 மணிக்கு புறப்பட்டது. தண்டவாளம் குறுக்கே இரும்பு கம்பியை வைத்தது யார், ரயிலை கவிழ்க்க சதி செய்தனரா என ரயில்வே போலீசார், மகுடஞ்சாவடி போலீசார் விசாரிக்கின்றனர். கேரளா எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - புனே, ஆலப்புழா - சென்னை ஆகிய ரயில்களும் 2 மணி நேரம் தாமதமாகின.

Advertisement