போர் தொடங்குகிறது; சமரசத்துக்கு வாய்ப்பில்லை; ஈரான் தலைவர் கமேனி அறிவிப்பு

27


டெஹ்ரான்: ''போர் தொடங்குகிறது. சமரசத்துக்கு வாய்ப்பில்லை'' என அமெரிக்கா, இஸ்ரேலுக்கு, ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையேயான போர் கடந்த 13ம் தேதி தொடங்கியது. ஈரான் அணுசக்தி நிலையங்கள், ராணுவ நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், கோட்டை வாயிலில் படைகள் வாள் ஏந்தி நிற்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி பதிவிட்டுள்ளார். அவர் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்து, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:



போர் தொடங்குகிறது. பிராந்திய பயங்கரவாதத்துக்கு எதிராக பலத்துடன் இயங்க வேண்டும், சமரசத்துக்கு வாய்ப்பில்லை. டெல் அவிவ் மீது Fattah-1 ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானை நிபந்தனையின்றி சரணடையுமாறு அழைப்பு விடுத்த போதிலும், இரு நாடுகளும் மாறி, மாறி தாக்குதல் நடத்தி வருகிறது.


ஈரான் இஸ்ரேலை நோக்கி இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. தற்போது, ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்து இருப்பது போர் இன்னும் உக்கிரம் அடையும் என்பதை எடுத்துரைக்கிறது.

Advertisement