தி.மு.க., என்றாலே சூழ்ச்சி தான்; இன்னும் எட்டே மாதங்களில் வீட்டுக்கு அனுப்பி விடுவோம்: அன்புமணி ஆவேச பேச்சு

திருவண்ணாமலை: ''தி.மு.க., என்றாலே சூழ்ச்சி தான். இன்னும் எட்டு மாதத்தில் வீட்டிற்கு அனுப்ப வேண்டும்'', என பா.ம.க., தலைவர் அன்புமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை நடந்த மாவட்ட பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: 2026ல் தமிழகத்தில் பா.ம.க., ஆள வேண்டும். கட்சியில் நிலவும் குழப்பத்திற்கு தி.மு.க., செய்த சூழ்ச்சியே காரணம் என்பதை பா.ம.க.,வினர் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க., என்றாலே சூழ்ச்சி தான். சூழ்ச்சியான கட்சி. சூழ்ச்சியான இயக்கம். இன்னும் 8 மாதத்தில் கொடுங்கோல் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
வீதி வீதியாகப் போதைப்பொருட்கள் விற்பனை செய்கிறார்கள். எனவே, தமிழகம் என்ற பெயரை, குடிகார நாடு, போதை நாடு, கஞ்சா நாடு என மாற்றிக் கொள்ளலாம். வன்னியர் சமுதாய மக்களால் தான் தி.மு.க., வளர்ந்தது.
இன்று ஆட்சியில் இருந்து கொண்டிருக்கிறது. சமுதாயத்தின் எதிரி தி.மு.க., ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என முதல்வர் சொல்கிறார். இவ்வாறு ஒரு முதல்வர் சொல்வாரா? சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் பகிரங்கமான பொய்யை சொல்கிறார். அதிகாரத்தை வைத்துக் கொண்டு அதிகாரம் இல்லை என நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
வேறு யாருக்கு அதிகாரம் இருக்கிறது. நாங்கள் யாரிடம் போய் கேட்போம். வரும் தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஒரு விவசாயி கூட ஓட்டு போடக்கூடாது. விவசாயிகள் கடவுள் அவர்களை போய் குண்டர் சட்டத்தில் கைது செய்கிறார்களே, மண்ணை காப்பாற்ற வேண்டும் என போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்வதா? இன்றைக்கு தி.மு.க.,வில் இருக்கும் பாதி பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். கொள்ளை அடித்து விட்டு, கஞ்சாவை கடத்தி விட்டு, சாராயத்தை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அன்புமணி பேசினார்.






மேலும்
-
கேதார்நாத் மலையேற்றப் பாதையில் நிலச்சரிவு: பக்தர்கள் இருவர் உயிரிழப்பு
-
தலையிட்டால் சரி செய்ய முடியாத பின்விளைவு ஏற்படும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
-
விமான நிலையத்தில் மோடியை வரவேற்றார் குரோஷியா பிரதமர்
-
புதிய தமிழக தகவல் ஆணையர்களை நியமித்து கவர்னர் உத்தரவு
-
போருக்கு மத்தியில் ஈரானில் இருந்து இந்தியா திரும்பும் மாணவர்கள்; மத்திய அரசு நடவடிக்கை
-
காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல்