ரூ.3 ஆயிரத்திற்கு கார்களுக்கு வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ்; ஆகஸ்ட் 15ம் தேதி முதல் புதிய அறிமுகம்

புதுடில்லி: ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ரூ.3 ஆயிரத்திற்கு கார்களுக்கு வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் செலுத்தி பாஸ் பெற்றுக்கொண்டால், நாடு முழுவதும் ஓராண்டு அல்லது 200 முறை சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் திட்டம் ஆக., 15ம் தேதி முதல் அமலாகிறது. வணிக வாகனங்கள் அல்லாத தனி நபர் வாகனங்களுக்கு, இந்த பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.
கார்,ஜீப், வேன் போன்ற தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமே பாஸ் பொருந்தும். 60 கி.மீ.,க்குள் உள்ள சுங்கச்சாவடிகளில் மீண்டும், மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டிய பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. வருடாந்திர பாஸ் திட்டம், காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும்.
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதன் மூலமும், சுங்கச்சாவடிகளில் உள்ள தகராறுகளை நீக்குவதன் மூலமும் கோடிக்கணக்கான தனியார் வாகன டிரைவர்களுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்கும். இவ்வாறு நிதின் கட்கரி கூறியுள்ளார்.











மேலும்
-
புதிய தமிழக தகவல் ஆணையர்களை நியமித்து கவர்னர் உத்தரவு
-
போருக்கு மத்தியில் ஈரானில் இருந்து இந்தியா திரும்பும் மாணவர்கள்; மத்திய அரசு நடவடிக்கை
-
காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல்
-
பொது இடங்களில் கொடிக்கம்பம் வைக்க கட்டணம்; தமிழக அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை
-
எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது
-
தொழில்துறை வளர்ச்சி குறித்த அமைச்சரின் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன: அன்புமணி கேள்வி