காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல்

சென்னை: 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு கிடைக்கும்படி அரசாணையை மாற்றி அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
போதிய ஓய்வு இல்லாமலும், விடுமுறை இல்லாமலும் காவலர்கள் தவித்து வரும் நிலையில், தற்போது காவல்துறைக்கான பதவி உயர்வுக்கான காலத்தை குறைக்கிறேன் என்ற பெயரில் புதிய அரசாணை பிறப்பித்து, 2011-ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான காவலர்களுக்கு சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு கிடையாது என மேலும் வதைத்துள்ளது தமிழக அரசு.
கடந்த 2021-ஆம் ஆண்டு அறிவித்த காவல்துறையில் பணி உயர்வு பெறுவதற்கான தகுதி காலம் குறைக்கப்படும் எனும் தேர்தல் வாக்குறுதியை, நெடுங்காலமாக கிடப்பில் போட்டு காலந்தாழ்த்தி விட்டு இப்போது அரசாணை பிறப்பிக்க காரணம், இன்னும் ஓர் ஆண்டில் தேர்தல் வருவதனாலா? அல்லது 37,000-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் ஏமாற்றி செலவைக் குறைக்கலாம் எனும் எண்ணமா? என்று மக்கள் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது.
திராவிட மாடல் ஆட்சியில் திசை எட்டும் கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கின் சுவடு தேய்ந்து வரும் நிலையில், இப்படி காவலர்களின் பணி நியமன ஆண்டை கருத்தில் கொண்டு பதவி உயர்வில் பாரபட்சம் காட்டினால், காவலர்களின் பணித்திறன் பாதிக்கப்பட்டு, மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். எனவே, 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு கிடைக்கும்படி அரசாணையை மாற்றி அமைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை
வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும்
-
இன்டர் மிலன் அணி 'டிரா': கிளப் உலக கோப்பை கால்பந்தில்
-
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தோருக்கு மிரட்டல்: தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்
-
பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்ப்பு; கோவை அரபிக் கல்லூரி முதல்வர் உள்பட 2 பேர் கைது
-
வாக்காளர் அடையாள அட்டை 15 நாட்களில் வழங்கும் புதிய முறை: தேர்தல் ஆணையம் அறிமுகம்
-
டைம்ஸ் உயர்கல்வி தரவரிசை பட்டியல்: இந்திய கல்வி நிறுவனங்களுக்கு எந்த இடம்
-
கொச்சி அணிக்கு ரூ.538 கோடி இழப்பீடு வழங்க பி.சி.சி.ஐ.,க்கு உத்தரவு